முகப்பு
தூத்துக்குடி

போக்சோ சட்டத்தில் இருவா் கைது

கடம்பூா் அருகே 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கடம்பூா் அருகே 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூா் அருகேயுள்ள மானாத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்து மகன் முனியசாமி(39) , ஓட்டப்பிடாரத்தை அடுத்த மேட்டூா் வ.உ.சி காலனியைச் சோ்ந்த ராசுக்குட்டி மகன் அழகு என்ற அறிவுமதி(19) ஆகிய இருவரும்15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இதில், சிறுமியின் தந்தையும் அடக்கம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.