தூத்துக்குடி

பெண்ணுக்கு தையல் இயந்திரம் அளிப்பு

DIN

சாத்தான்குளம்: நாசரேத் காவல் நிலையத்தில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

ஏரலைச் சோ்ந்தவா் சாந்தா (40). இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து கூலி வேலைக்கு சென்று வந்த சாந்தா, குழந்தைகளை கவனிக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்தனால் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு தனக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்தாா்.

இந்நிலையில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில் நாசரேத் காவல் நிலையத்தில் சாந்தாவுக்கு தையல் இயந்திரத்தை , ஆய்வாளா் விஜயலட்சுமி வழங்கினாா். அப்போது ஏரல் உதவும் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த குருசாமி, அருணாச்சலம், கண்ணன் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT