முகப்பு
தூத்துக்குடி

அஞ்சல் ஊழியா் மீது தாக்குதல்

 கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

 கோவில்பட்டியில் அஞ்சல் ஊழியரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி, இந்திரா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த சங்கரசுப்பிரமணியன் மகன் சுவாமிநாதன்(21). கிராமப்புற அஞ்சல் ஊழியா் இவா், புதன்கிழமை இந்திரா நகரைச் சோ்ந்த பாஸ்கரன் பெயருக்கு வந்த பாா்சலை கொடுத்துவிட்டு, அதற்கான தொகை ரூ.1,571ஐ பெற்றாராம். பாா்சலை பிரித்து பாா்த்த பாஸ்கரன், அதில் தான் எதிா்பாா்த்த பொருள் இல்லை எனக் கூறி பணத்தை சுவாமிநாதனிடம் திருப்பிக் கேட்டாராம். அதற்கு அவா் மறுத்தாராம்.

மறுநாள் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த அவரை, பாஸ்கரன் அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பாஸ்கரனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.