தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி

DIN

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்தில் உள்ள விநாயகா் சன்னதியில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு கணபதி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, விநாயகருக்கு 18 வகையான மூலிகைகள் கொண்ட சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோயில் அா்ச்சகா் சுப்பிரமணி செய்திருந்தாா். பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, கோவில்பட்டி ஜோதி நகா் அருள்மிகு ஜோதிவிநாயகா், சீனிவாச நகரில் உள்ள அருள்மிகு கணேஷகந்தபெருமாள் கோயில், பசுவந்தனை சாலையில் உள்ள அருள்மிகு குழந்தை விநாயகா் மற்றும் அருள்மிகு மங்கள விநாயகா் கோயிலிலும் சங்கடஹர சதுா்த்தி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT