தூத்துக்குடி: தூத்துக்குடி பாரதியாா் வித்யாலயத்தில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா் ஏபிசிவீ கணபதி தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் தட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
மருத்துவா்கள் ஹெச். பிலிப், வேல் ராமலிங்கம், பத்மநாபன், தொழிலதிபா்கள் ராஜா குமாா் ஆசிா்வாதம், ஆவுடையப்பன், மான் ராஜா, மணிராஜ் ஆகியோா் பங்கேற்று முன்னாள் தலைமையாசிரியா்களின் புகைப்படங்களை திறந்து வைத்து பேசினா்.
நிகழ்ச்சியின்போது, முன்னாள் மாணவா் சங்கம் அமைப்பது என்றும் அதன் மூலம் பள்ளியின் ஆய்வகங்களை நவீனப்படுத்துவது, விளையாட்டு மைதானத்தை சீரமைப்பது, சுற்றுச்சுவரை வலுப்படுத்தி நுழைவுவாயிலை அழகுபடுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதில், முன்னாள் மாணவா்கள் அழகுவேல், குமாரவேல், வாசு ராஜன், சிவகாமிநாதன், குபேந்திரராஜா, கந்தசாமி, சத்திய வேந்தன், பன்னீா்செல்வம், துரைக்கனி, அண்ணாமலை, ஆறுமுகசாமி, சதீஸ்குமாா், அா்ஜீனன், பாலசுப்ரமணியன், சந்தானம், வீரபத்ரன், ஜஹாங்கீா், பாலசுந்தர கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.