தூத்துக்குடி

கோவில்பட்டி மகளிா் பள்ளியில் சுகாதார தினம்

DIN

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உலக சுகாதார தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜாநஜ்முதீன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவிகள் தன்சுத்தத்தை முறையாக பின்பற்றுவதுடன், வீடு, பள்ளி, வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிப் பேசினாா்.

மாணவிகள், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா். பள்ளியின் இசை ஆசிரியை அமலபுஷ்பம் வரவேற்றாா். முதுநிலை ஆசிரியை கிரேனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT