அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் சத்தியமூா்த்தி (திண்டுக்கல்), கண்ணன் (தென்காசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கு.சரவணன் சிறப்புரையாற்றினாா். மாநில துணைத் தலைவா்கள் கண்ணையன், மரகதலிங்கம் ஆகியோா் பேசினா்.
திருச்சியில் இம்மாதம் 25ஆம் தேதி கருப்புச்சட்டை அணிந்து நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 100 போ் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.