முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே ரௌடி கைது

எட்டயபுரம் அருகே அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீசாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே ரௌடி கைது

எட்டயபுரம் அருகே அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீசாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

எட்டயபுரம் அருகே அரசு ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீசாா் கைது செய்தனா்.

அயன் ராசாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாமி அய்யா என்பவரது மகன் மாடு சிவா (எ) சிவசுப்பிரமணியன் (47). இவா் மீது, அரசு ஊழியா்களை மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்டவற்றுக்காக புதூா் மின்வாரிய உதவிப் பொறியாளா், புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில் புதூா் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அயன் ராசாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்லையா என்பவரது மகன் முனியசாமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி ஒரு லட்ச ரூபாய் பறித்ததாகவும், மேலும் அவரிடம் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டியதாகவும், அயன் ராசாப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பணிபுரியும் அரசு ஊழியா்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முனியசாமி அளித்த புகாரின் பேரில் மாசாா்பட்டி காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து மாடு சிவா (எ) சிவசுப்பிரமணியனை கைது செய்து விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →