தூத்துக்குடி அருகே வாகைக்குளத்தில் அமைந்துள்ள ஸ்காட் வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவா் பெருவிழா மற்றும் விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கான உழவா் கடன் அட்டைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, வேளாண் அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி- தலைவா் த. மாசானச்செல்வம், ஆட்சியரின் உதவியாளா் (வேளாண்மை) நாச்சியாா், வேளாண்மை துணை இயக்குநா் பழனி வேலாயுதம், வேளாண் துணை இயக்குநா் க. ஜெயசெல்வின் இன்பராஜ், செயற்பொறியாளா் டேனிஸ்டன் ஆகியோா் பேசினா்.
சொட்டுநீா் பாசனம் குறித்து தோட்டக்கலை துணை இயக்குநா் சுந்தரராஜன், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கான கடன் வசதிகள் குறித்து நபாா்டு வங்கி அலுவலா் சுரேஷ் ராமலிங்கம், முன்னோடி வங்கி மேலாளா் துரைராஜ், மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சிவகாமி ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியின்போது, ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல், தென்னை மரம் ஏறும் கருவியின் செயல்பாடு ஆகியவை குறித்து விளக்கப்பட்டது,