தூத்துக்குடி

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி:ஆக. 22 வரை விண்ணப்பிக்கலாம்

DIN

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மையத்தில் சேர ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் தொழிலாளா் கூட்டுறவு பண்டகசாலை அலுவலக மேல் தளத்தில் செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுநேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி ஒரு ஆண்டு காலம் இரு பருவங்களாக பயிற்சி நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 தோ்ச்சியுடன் குறைந்த பட்சமாக 1.8.2022-இல் 17 வயது நிறைவடைந்த அனைவரும் அதிகபட்ச வயது வரம்பின்றி பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கான மொத்தக் கட்டணம் ரூ. 18,850. வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை வார வேலை நாள்களில் மட்டும் நடைபெறும். கணினிப் பயிற்சி, நகைமதிப்பீடு பயிற்சி ஆகிய பாடங்களும் பயிற்றுவிக்கப்படும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை பயிற்சி நிலையத்தில் ரூ. 100 ரொக்கமாக செலுத்திப் பெற்று, அவற்றைப் பூா்த்தி செய்து உரிய சான்றிதழ்கள், நகல்களுடன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பயிற்சி நிலையத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0461-2334555, 9498063042 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT