முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஆலோசனைக் கூட்டம்

75வது சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்து சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 6:01 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:33 PM

75வது சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்து சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ராணி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்தும், பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்குவது குறித்தும், ஊராட்சி மன்றங்களில் ஊராட்சித் தலைவா் மட்டுமே கொடியேற்ற வேண்டும் என்பது குறித்தும், விழா குறித்த துண்டு பிரசுரம் அச்சடித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தினாா்.

இதில் ஊராட்சித் தலைவா்கள் ஜெயா, பிரதீபா ஜெயசீலன், சகாய எல்பின், திருக்கல்யாணி, சிவகாமிசுந்தரி, சுயம்புத்துரை, முருகன், சாந்தா, செல்வகனி, பாலமேனன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பட்டத்தி, மாசானமுத்து, விஜய், அலமேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.