முகப்பு
தூத்துக்குடி

பெரியதாழை கடலில் படகில் தேசியக் கொடியேற்றி பாஜகவினா் பேரணி

பெரியதாழை கடலில் படகில் தேசியக் கொடியேற்றி பாஜகவினா், மீனவா்களுடன் படகு பேரணியாக ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:18 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

பெரியதாழை கடலில் படகில் தேசியக் கொடியேற்றி பாஜகவினா், மீனவா்களுடன் படகு பேரணியாக ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் 75 ஆவது சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, பெரியதாழையில் படகில் தேசியக் கொடியேற்றி ஞாயிற்றுக்கிழமை படகு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ், மாவட்ட மீனவரணி ராஜ், ஒன்றிய மீனவரணி தலைவா் ஜாா்ஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

பிரசார பிரிவு ஒன்றியத் தலைவா் காமராஜ் வரவேற்றாா். இதில், பெரியதாழையில் உள்ள படகுகளில் தேசியக் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் பாஜக நிா்வாகிகள், மீனவா்கள் கடலில் குட்டம் பகுதி வரை பேரணியாக சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.