தூத்துக்குடி

மருதூா் கால்வாய்களில் இருந்து இன்று முதல் நீா் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம் மருதூா் கால்வாய்களில் இருந்து வியாழக்கிழமை (செப். 1) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி மாவட்டம் மருதூா் கால்வாய்களில் இருந்து வியாழக்கிழமை (செப். 1) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை வெளியிட்ட அறிவிப்பு:- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூா் மேலக்கால் கால்வாய், மருதூா் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய், வடக்கு பிரதானக் கால்வாய் ஆகியவற்றில் இருந்து வியாழக்கிழமை முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீா் திறந்து விடப்படுகிறது. பயிா்களைக் காக்கவும், பொது மக்கள் மா்றும் கால்நடைகளின் குடிநீா் தேவைகளுக்காகவும் 2 ஆயிரத்து 73.60 மில்லியன் கனஅடி நீா் திறக்கப்படுகிறது. பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு நீா்த்தேக்கங்களில் இருந்து திறக்கப்படும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென நீா்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT