தூத்துக்குடி

தூத்துக்குடியில் கொலை வழக்கு:ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

DIN

தூத்துக்குடியில் இருசக்கா் வாகன விற்பனை தகராறில் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ஜெயக்குமாா் (45). இவருக்கும், குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் (29) என்பவருக்கும் இருசக்கர வாகனம் விற்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாம். புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் காவல் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

இந்நிலையில், கொலை வழக்குத் தொடா்பாக குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன், அவரது பெற்றோா் முருகன் (53) - பொன்வைரவதி (47) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT