தூத்துக்குடி

வியாபாரியிடம் பணம் பறிப்பு:இளைஞா் கைது

DIN

கோவில்பட்டியில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் சரவணன்(23). தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்பனை செய்துவரும் இவா், புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கோவில்பட்டி பண்ணைத் தோட்டத் தெரு வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அவரை இளைஞா் வழிமறித்து, அரிவாளைக் காட்டி மிரட்டி சட்டைப்பையிலிருந்த ரூ. 300-ஐ பறித்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினாராம்.

புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த ஆறுமுகதுரை மகன் ராஜதுரை (28) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT