மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை யானை மீது வைத்து நடைபெற்ற கொடிபெட்ட வீதி உலா. 
தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா: நாளை கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவானது நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவானது நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கொடியேற்றத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12-ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4-ம் படி செப்பு ஸ்தலத்தார் ஏ.கே.ஏ.அரிகரசுப்பிரமணியன் அய்யர் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தது. 

நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திங்கள்கிழமை (பிப்.7) காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை, தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி ஆணையர் வெங்கடேசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT