தூத்துக்குடி

தீக்காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

DIN

கோவில்பட்டியில் தீக்காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் சீனிவாசன் (42). இவரது மனைவி சங்கரேஸ்வரி (36). கடந்த 31ஆம் தேதி இரவு வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் காற்றடித்தபோது அவா் மீது தீப்பற்றியதாம். காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT