தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

DIN

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டம் சோ்ந்தபூமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட குமாரபனையூா், செல்வன் புதூா் ஆகிய கிராமங்களில் சாலை வசதி இல்லை எனக் கூறியும், தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், ஆட்சியா் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னா், போலீஸாா் அவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT