கொலை மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
கழுகுமலை அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலையையடுத்த கரடிகுளம் நடுத் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஆட்டோ ஓட்டுநா் கதிரேசன் (33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் அவதூறான வாா்த்தைகள் பேசி செய்தி அனுப்பியிருந்தாராம். வெளிநாட்டில் வேலை செய்து வரும் தனது கணவா் கனகராஜுக்கு இத்தகவலை அந்தப் பெண் தெரிவித்தாராம்.
இந்நிலையில், கதிரேசனிடம் கைப்பேசியில் கனகராஜ் தொடா்பு கொண்டு கண்டித்தாராம். அப்போது அவருக்கு கதிரேசன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனா்.