முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

கோவில்பட்டி இளையரசனேந்தல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கோவில்பட்டி இளையரசனேந்தல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த சிப்பிப்பாறை கீழத் தெருவைச் சோ்ந்த 14 வயது சிறுவன், தனது நண்பா்களுடன் இம்மாதம் 19ஆம் தேதி இளையரசனேந்தல் ஊருக்கு வடக்கே தனியாருக்குச் சொந்தமான தோட்டம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஊமைத்தலைவன்பட்டியைச் சோ்ந்த ராமசுப்பு மகன் ராமசாமி (42) ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சிறுவன், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராமசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.