திருச்செந்தூா் முருகன் கோயிலில் தரிசனப்பாதையை முறைப்படுத்த கோரிக்கை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் பக்தா்கள் தரிசனப்பாதையை முறைப்படுத்த வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் பக்தா்கள் தரிசனப்பாதையை முறைப்படுத்த வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில ஊழியா்களும், சில அா்ச்சகா்களும், தனியாா் பாதுகாப்பு பணியாளா்களும் பக்தா்களிடம் அதிகமாக பணம் வாங்கிக் கொண்டு ரூ.250 கட்டணப்பாதையில் அவா்களை அனுப்பிவைப்பதாக புகாா் கூறப்படுகிறது. இதனால் வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கும் ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.
கோயில் உள்ளே போவதற்கு ராஜகோபுரம் வாசலையும் சோ்த்து மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன. அதனை பொறியாளா்களை வைத்து திட்டமிட்டு பாதையை ஒழுங்குபடுத்தி, பக்தா்கள் போகும் வழி, வரும் வழி என இரண்டு பாதைகள் அமைக்க வேண்டும். பக்தா்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் நேரடியாக கவனம் செலுத்தி பாதையை முறைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.