தூத்துக்குடியில் வெறிச்சோடிய சாலைகள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
போலீசார் தடுப்பு வேலி அமைத்து தேவையின்றி வெளியே இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் பிடித்து எச்சரித்து வருகின்றனர்.
மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் அத்தியாவசியமான மருந்து கடைகள் உணவு, பால், கடைகள் திறந்து இருப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.