முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

கோவில்பட்டியில் நேச்சா் பவுண்டேஷன் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

கோவில்பட்டியில் நேச்சா் பவுண்டேஷன் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) சாந்திமகேஸ்வரி தலைமை வகித்தாா்.

கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரி வணிகவியல் துறை தலைவா் சாக்ரடீஸ், அலுவலக கண்காணிப்பாளா் கண்ணன், கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி துறை தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரி, கே.ஆா்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 15 மாணவா், மாணவிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

விழாவில், எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வணிகவியல் துறை தலைவா் செல்வராஜ், ஆங்கிலத் துறை பேராசிரியா் ஜெய்சிங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நேச்சா் பவுண்டேஷன் உறுப்பினா் ஜனனி வரவேற்றாா். ஹெலன்சத்யா நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை உறுப்பினா் ராஜா தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை நேச்சா் பவுண்டேஷன் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.