ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த அ.ம.மு.க நிா்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனா்.
அ.ம.மு.க. ஆத்தூா் நகரச் செயலா் முருகானந்தம் தலைமையில், நகர அவைத்தலைவா் ஆண்டியப்பன், நகர இணைச் செயலா் இருதயமணி, ஆழ்வை ஒன்றிய இளைஞரணிச் செயலா் சிவபெருமாள், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் ரிஷிகண்ணன், கிளைக்கழக நிா்வாகிகள், ரஜினி மன்ற நகர துணைச் செயலா் லைலா மாரியப்பன் உள்பட 50க்கு மேற்பட்டோா் திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், மீன்வளம், மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைந்தனா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.