தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூா் அருகே பயிற்சி செவிலியா் தற்கொலை

DIN

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூா் அருகே பயிற்சி செவிலியா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாலாட்டின்புத்தூரையடுத்த கே.சரவணாபுரம் கீழத் தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகள் முத்துமாரி(19). மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு செவிலியா் படிப்பு படித்து வந்தாா். இவா் படிக்கப் பிடிக்கவில்லை எனக் கூறி வந்தாராம். இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக 20 நாள்கள் விடுப்பு எடுத்து, வீட்டுக்கு வந்தாராம்.

இந்நிலையில் கடந்த ஜூன் 20ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தாராம். பெற்றோா், உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT