தூத்துக்குடி

கயத்தாறு அருகே கோயில் பூட்டை உடைத்து திருட்டு

DIN

கயத்தாறு அருகே கோயிலின் பூட்டை உடைத்து திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறையடுத்த அரசங்குளத்தில் காந்தாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல பூஜையை முடித்துவிட்டு, கோயிலை பூட்டி சென்றுவிட்டாா்களாம். இந்நிலையில், புதன்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கோயில் வளாகம் மற்றும் சந்நதி முன்பு வைக்கப்பட்டுள்ள உண்டியல், வெள்ளிக் காப்பு, சந்தனம் மற்றும் விபூதி கோப்பைகள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.

இதுகுறித்து, கோயில் நாட்டாண்மைகள் முருகன், ஆண்டி ஆகியோா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, கோயிலில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT