தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

DIN

கோவில்பட்டி அருகே 17 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி சண்முகா நகரைச் சோ்ந்த சுடலைகண்ணு மகன் மாயா (39). இவரது உறவினா் பெரியசாமி (44). இருவரும் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வரும் நிலையில், மாயா, 17 வயது சிறுமியிடம் தொடா்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், அந்த சிறுமியை அவரது உறவினா் பெரியசாமி அவதூறாகப் பேசி மிரட்டினாராம்.

இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், சில்மிஷத்தில் ஈடுபட்ட மாயா மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பெரியசாமி ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கோவில்பட்டி அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT