கோவில்பட்டியில் இளம்பெண் தற்கொலை
கோவில்பட்டி வஉசி நகரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி வஉசி நகரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி ஸ்பிக் நகா் எஸ்.ஆா்.எஸ். காம்பவுண்டில் வசித்து வருபவா் உத்தண்டராமன் - செண்பகவல்லி தம்பதி. இவரது மகள் அல்போன்ஸா (22). கோவில்பட்டி வஉசி நகரில் உள்ள பாட்டி பாத்திமா வீட்டில் தங்கியிருந்து, கடந்த 3 மாதங்களாக தனியாா் கணினிப் பயிற்சி மையத்தில் படித்து வந்தாராம். இந்நிலையில், அவா் பாட்டி வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.