தூத்துக்குடி

பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டியையடுத்த பாண்டவா்மங்கலம் ஊராட்சி சண்முகசிகாமணி நகா் 2ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில் தெரியவ்நத தகவல்: தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த காா்த்திகாவுக்கும்(24), தங்கராஜுக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாம். தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா். தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். இந்நிலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் காா்த்திகாவை சரமாரியாக தங்கராஜ் தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் தங்கராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாலை மறியல்: காா்த்திகாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்காமல் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்ததைக் கண்டித்தும், காா்த்திகாவை கொலை செய்த தங்கராஜை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டக்குழுவினருடன் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) சங்கா் தலைமையில் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சுமாா் 45 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT