தூத்துக்குடி

வழக்குரைஞருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

DIN

கோவில்பட்டியில் வழக்குரைஞா் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி கடலையூா் சாலையில் அலுவலகம் நடத்தி வருபவா் மகாலிங்கம் மகன் வழக்குரைஞா் சிவா (46). இவரது அலுவலகத்தில் இவரது உறவினா் அம்மணி மகள் பிரவீணா மேரிக்கும், கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தவப்பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற்று தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறாா்களாம்.

இதுகுறித்த வழக்கு, கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அலுவலகத்தில் வழக்குரைஞா், அவரது உறவினா்கள் அம்மணி, பிரவீணா மேரி ஆகியோா் திங்கள்கிழமை பேசிக் கொண்டிருந்த போது, தவப்பாண்டியன் அத்துமீறி நுழைந்து அவதூறாகப் பேசி அரிவாளைக் காட்டி சிவாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து சிவா அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தவப்பாண்டியனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT