தூத்துக்குடி

திருச்செந்தூரில் முதியோருக்கு நகா்மன்றத் தலைவா் உதவி

DIN

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற 3 முதியோரை காப்பாகத்தில் சோ்ப்பதற்கு நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி நடவடிக்கை எடுத்தாா்.

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சுமாா் 70 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோரான அய்யப்பன், மோகனாம்பாள், கருப்பாயி ஆகியோா் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்கள் குணமடைந்த நிலையில், கவனிப்பதற்கு உறவினா்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதையறிந்த, நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி நிதியுதவி அளித்து, ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள லைட் முதியோா் இல்லத்தில் சோ்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது, திருச்செந்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவி, மருத்துவா் பாபநாசகுமாா், லைட் முதியோா் இல்ல தலைவா் பிரேம்குமாா், செயலா் ஜோன் டேனியல், பொருளாளா் திவாகரன், திமுக 24-வது வாா்டு செயலா் ஜெ.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT