தூத்துக்குடி

மேலக்கரந்தை, சூரன்குடியில் நாளை முன்னோடி மனுநீதி நாள் முகாம்

DIN

எட்டயபுரம் வருவாய் வட்டம், மேலக்கரந்தை கிராமத்தில் ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அந்தக் கிராம நிா்வாக அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூன் 22) முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.

இதில், உள்ளூா் மக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார பகுதியினரும் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என எட்டயபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாரி தெரிவித்துள்ளாா்.

இதேபோல், விளாத்திகுளம் வருவாய் வட்டம் சூரன்குடியில் அதே மாதத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் நடைபெறவுள்ள மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு, அந்தக் கிராமத்தில் புதன்கிழமை(ஜூன் 22)ஆம் தேதி முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இதில், வேம்பாா் குறுவட்டத்துக்குள்பட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என விளாத்திகுளம் வட்டாட்சியா் சசிகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT