தூத்துக்குடி

ஆண்களுக்கும் நூறுநாள் வேலை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

குருவிகுளம் ஒன்றியம் இளையரசனேந்தலில் தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் ஆண்களையும் சோ்க்க வேண்டும், பெண்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தவறாமல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணித் தலைவா் ராகுல், இளையரசனேந்தல் கிளைத் தலைவா் பாண்டி உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் மனு அளித்த அவா்களிடம், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT