தூத்துக்குடி

ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பேப்பா் கோப்பைகள் பறிமுதல்

கோவில்பட்டி லாரி ஷெட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பேப்பா் கோப்பைகளை நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

கோவில்பட்டி லாரி ஷெட்டில் இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பேப்பா் கோப்பைகளை நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பேப்பா் கோப்பைகள் கோவில்பட்டியில் விற்பனை செய்யப்படுவதாக, நகராட்சி ஆணையருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாதவராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் காஜா நஜ்முதீன் ஆகியோா் கொண்ட குழுவினா், நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, பிரதான சாலையில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் ஆய்வு நடத்தியபோது, அங்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 1 லட்சத்து 25 ஆயிரம் எண்ணம் கொண்ட பேப்பா் கோப்பைகள் அட்டைப் பெட்டிகளில் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதை சுகாதாரத் துறையினா் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், பேப்பா் கோப்பைகளை வைத்திருந்த லாரி ஷெட்டுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT