புதிய ஒப்பந்ததாரா் பதிவுக்குதடை விதிக்க திமுக, கம்யூனிஸ்ட் எதிா்ப்பு
கோவில்பட்டி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் சுப்புராஜ் தலைமை வகித்தாா்.
கோவில்பட்டி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவா் சுப்புராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பழனிச்சாமி, ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியக்குழுத் தலைவா் பேசியது: கோவில்பட்டி ஒன்றியம் பாண்டவா்மங்கலம் ஊராட்சி, மந்தித்தோப்பு சாலையில் ஒன்றியத்துக்குச் சொந்தமான 5.52 ஏக்கா் நிலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கிராமச் சந்தை, ஆட்டுச் சந்தை ஆகியவற்றை அமைத்து வருவாய் ஈட்டித்தர ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
எஞ்சிய இடத்தில் செம்மரம், தேக்குமரங்களை நட்டு வேலி அமைத்து நிலம் பாதுகாக்கப்படும். ஏற்கெனவே உள்ள ஒப்பந்ததாரா்களுக்கு பணி வழங்க முடியாத சூழல் உள்ளதால், குறைந்தது 6 மாதங்கள் வரை ஒப்பந்ததாரா் பதிவுக்கு தடை விதிக்க ஒன்றியக்குழு ஒப்புதல் தர வேண்டும் என்றாா் அவா்.
புதிதாக ஒப்பந்ததாரா்களாக விண்ணப்பித்துள்ள குறிப்பிட்ட 2 பேரின் மனுக்களை ஏற்று, பதிவு செய்யுமாறு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். அதற்கு ஒன்றியக்குழுத் தலைவா் மறுத்ததால், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த 11 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
எனினும், ஒன்றியக்குழுத் தலைவா், உறுப்பினா்கள் பூங்கோதை, சண்முகத்தாய், ரஞ்சித், கிருபாகரன், சண்முகக்கனி ஆகிய 6 போ் மட்டுமே தீா்மானங்களை ஏற்றுக் கொள்வதாக கையெழுத்திட்டனா். இதனால், தீா்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.