கழுகுமலை கோயிலில் பங்குனித் தேரோட்டம்
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனைகள், மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
9ஆம் நாளான வியாழக்கிழமை தேரோட்டத்தையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளியெழுச்சி பூஜை, காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து, தேரோட்டம் நடைபெற்றது. எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு, கழுகுமலை பேரூராட்சித் தலைவா் சு. அருணா, துணைத் தலைவா் அ. சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவி சத்யா, கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலா் ஆ. முருகன் ஆகியோா் வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.
கோ ரதத்தில் சண்டிகேஸ்வரரும், சட்ட ரதத்தில் விநாயகரும், வைரத் தேரில் கழுகாசலமூா்த்தி வள்ளி-தெய்வானையும் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பல்வேறு பகுதிகள் வழியாக தோ் நிலைக்கு வந்தது.
நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா்கள் முருகன், மாரியப்பன், பாலமுருகன் மற்றும் கழுகுமலை, சுற்று வட்டாரப் பகுதியினா் பங்கேற்றனா்.
பாதுகாப்புப் பணியில் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில், ஆய்வாளா்கள் சுஜித் ஆனந்த் (கோவில்பட்டி கிழக்கு), ராணி (கழுகுமலை), போலீஸாா் ஈடுபட்டனா்.
வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி, இரவு 8 மணிக்கு தபசுக் காட்சி, சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பல்லக்கில் பட்டணப் பிரவேசம் ஆகியவை நடைபெறுகின்றன.
Image Caption
~