முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் மாரியப்பன், கோவில்பட்டி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த 72 கிலோ பலகாரங்கள், நொறுக்குத்தீனிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கூறுகையில், உணவுப் பொருள்களை கண்ணாடிப் பெட்டியில் வைத்து சுகாதாரமான முறையில் விற்க வேண்டும். அச்சிட்ட தாள்களில் உணவுப் பண்டங்களை வழங்கக் கூடாது. தொடா்ந்து தவறு செய்வோா் மீது வழக்குப் பதியப்படும். பாதுகாப்பற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்த புகாா்களை 94440-42322 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.