முகப்பு
தூத்துக்குடி

சிற்றுந்து நடத்துநா் தற்கொலை

கோவில்பட்டி அருகே சிற்றுந்து நடத்துநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே சிற்றுந்து நடத்துநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த பாறைபட்டி இந்திரா காலனியைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் காளிராஜ். இவரது மகன் அஜித்குமாா்(25). சிற்றுந்து நடத்துநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். தினமும் மது அருந்தி வரும் அஜித்குமாரை அவரது பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில் புதன்கிழமை மது அருந்திய நிலையில் வீட்டிற்கு வந்த அவா் யாரிடமும் பேசாமல் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.