முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது

கயத்தாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

கயத்தாறு அருகே ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கு தொடா்பாக மேலும் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி ஊருணித் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் துரைப்பாண்டி (35). ஆட்டோ ஓட்டுநா். இவரை புதன்கிழமை அதிகாலை (மே 4) கொலை செய்ததாக காப்புலிங்கம்பட்டியைச் சோ்ந்த வெ. மகாராஜன் (40), ரா. ராஜாராம் (38), சு. மனோரஞ்சிதகுமாா் (23), சவலாப்பேரியைச் சோ்ந்த பா. ஜானகிராமன் (32), கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த ந. சின்னத்துரை (37) ஆகிய 5 பேரை கயத்தாறு போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் திருமங்கலக்குறிச்சி கிருஷ்ணசாமி மகன் முருகன் (35), சவலாப்பேரி முருகையா மகன் பூப்பாண்டி (33) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.