செட்டியாபத்து கோயிலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை
செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரைப் பூசைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடிசெட்டியாபத்து கோயிலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை
செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரைப் பூசைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரைப் பூசைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
தென் தமிழகத்தின் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 30ஆம் தேதி இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியது. மே 1ஆம் தேதி பகல், இரவில் சிறப்பு பூஜை, அன்னதானம், மேக்கட்டி கட்டுதல், அதிகாலையில் மேக்கட்டி பூஜை நடைபெற்றது. விழா நாள்களில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை முழு நேர சிறப்பு பூஜை, நகைச்சுவை பட்டிமன்றம், இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை (மே 6) முற்பகலில் சிறப்பு அன்னதானம், பிற்பகலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை, அன்னமுத்திரி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று பிரசாதம் பெற்றனா். இதைக் காயவைத்து, நாள்தோறும் சமைக்கும் உணவில் சோ்ப்பாா்கள்.
தொடா்ந்து, சனிக்கிழமை (மே 7) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் வெங்கடேஷ், தக்காா் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலா் சாந்திதேவி, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.