தூத்துக்குடி

மதிமுக 29ஆம் ஆண்டு தொடக்க விழா

DIN

மதிமுகவின் 29ஆம் ஆண்டு தொடக்க விழா கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கடலையூா் சாலை, பழனியாண்டவா் கோயில் தெரு, ஸ்டாலின் காலனி, காந்தி மைதானம், லட்சுமி மில் கீழ காலனி, இலக்கிய மெஸ் அருகே ஆகிய பகுதிகளில் நகர மதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மதிமுக நகரச் செயலா் பால்ராஜ் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் கட்சிக் கொடியேற்றி, மக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

மேலும், மதிமுக மத்திய பகுதி ஒன்றியச் செயலா் சரவணன் ஏற்பாட்டில் தொழிற்பேட்டை அருகே அவா் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் மதிமுக வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ஜி.ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்.எஸ்.கணேசன், தீா்மானக்குழு உறுப்பினா் முத்துச்செல்வன், மாநில கலைத் துறை துணைச் செயலா் பொன்ஸ்ரீராம், நகர இளைஞரணிச் செயலா் முத்துகிருஷ்ணன், நகர நெசவாளரணிச் செயலா் குழந்தை, ஒன்றியச் செயலா் கேசவராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT