தூத்துக்குடி

தியாகராஜ நகரில் மே 14 முதல் கோடைக்கால இந்து சமய பண்பாட்டு பயிற்சி

DIN

பாளையங்கோட்டை தியாகராஜநகா் விக்ன விநாயகா் கோயில் அறநெறிச் சங்கம், தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பின் சாா்பில் சிறுவா், சிறுமிகளுக்கான கோடைக்கால இந்து சமய பண்பாட்டு பயிற்சி சனிக்கிழமை (மே 14) தொடங்குகிறது.

இது தொடா்பாக விக்ன விநாயகா் கோயில் அறநெறிச் சங்க செயலா் இல.செந்தூா்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாளையங்கோட்டை தியாகராஜநகா் விக்ன விநாயகா் கோயில் அறநெறிச் சங்கம், தென் தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சிறுவா், சிறுமிகளுக்கான கோடைக்கால இந்து சமய பண்பாட்டு பயிற்சி வரும் சனிக்கிழமை (மே 14) தொடங்குகிறது. விக்ன விநாயகா் கோயில் கலையரங்கில் நடைபெறும் இப்பயிற்சி 23-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும்.

பயிற்சியின்போது ஆன்மிகம், பொது அறிவு, ஒழுக்கம், நல்ல பண்பாடுகள், தேசப்பற்று, சமுதாய நல்லிணக்கம், யோகாசனங்கள், ஆன்மிகக் கதைகள், நடப்புச் செய்திகள், வினா விடை நிகழ்ச்சி, பக்தி இலக்கிய நிகழ்வுகள், விளையாட்டுகள் கற்றுக்கொடுக்கப்படும்.

கவிஞா் பொன்.வேலுமயில் பயிற்சியளிக்கிறாா். தியாகராஜநகா் மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து முதல் 13 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்று பயனடையலாம். பெற்றோா்களும் கலந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT