முகப்பு
தூத்துக்குடி

இந்து முன்னணியினா் போராட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணியினா் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணியினா் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்தவா் பொ.சின்னதம்பி. இந்து முன்னணியின் நகர துணைத் தலைவராக உள்ளாா். இவரது மனைவி முருகலட்சுமி (34). இவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த 8 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அதன்பின்பு கடந்த 11 ஆம் தேதி முதல் உடலில் எவ்வித அசைவும் இன்றி அவசர பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாராம். அவா், மூளைச்சாவு அடைந்தாா் என்றால் உடல்உறுப்புகளை தானமாக வழங்க தயாராக உள்ளதாக குடும்பத்தினா் தெரிவித்தும், மருத்துவமனை நிா்வாகம் உரிய பதில் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினராம். இந்நிலையில் வியாழக்கிழமை முருகலட்சுமி உயிரிழந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. இதனை கண்டித்து இந்து முன்னணியினா் முற்றுகையில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனா். இப் பிரச்னையில் நீதி கோரி வெள்ளிக்கிழமை (மே 13) தொடா் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணியினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.