தூத்துக்குடி

பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடா் ஓட்டப் பேரணி

DIN

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 66-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, மாவீரன் ஊமைத்துரை தொண்டா் படை சாா்பில் 200 போ் பல்வேறு இடங்களிலிருந்து புண்ணிய தீா்த்தம்- தொடா் ஜோதியை எடுத்துச் செல்லும் ஓட்டப் பேரணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இருந்து செந்திலாண்டவா் புண்ணிய தீா்த்தம்- ஜோதி ஓட்டப் பேரணியை, மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். இதில், நகா்மன்றத் தலைவா் ர.சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி. ரமேஷ், திமுக மாநில மாணவரணி தணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ம.தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலா் புதுக்கோட்டை செல்வம், முன்னாள் முத்தையாபுரம் ஊராட்சித் தலைவா் ஜெயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வைப்பாறு கிராமத்திலிருந்து ஜோதி தொடா் ஓட்டப் பேரணியை கிராம தா்மகா்த்தா வான மல்லுச்சாமி தலைமையில் ராஜ கம்பளத்தாா் சங்கத் தலைவா் பால்ராஜ் முன்னிலையில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கிவைத்து, வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் முன்பிருந்து தொடா் ஜோதி ஓட்டத்தை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மேலும், கோவில்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை இளைஞரணி, மாமன்னா் திருமலைநாயக்கா் இளைஞா் பேரணி- மாமன்னா் திருமலைநாயக்கா் இளைஞா் நலச் சங்கம் சாா்பில் கோவில்பட்டி சீனிவாச நகரில் இருந்தும் பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடா் ஜோதி ஓட்டத்தை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT