ஆறுமுகனேரி கீழ சண்முகபுரம் அருள்மிகு வலம்புரிவிநாயகா் ஆலய வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமத்துடன் விழை தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி தீபாராதனை மற்றும் விமான கலசத்திற்கு புனித நீா் ஊற்றி வருஷாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் அருள்மிகு வலம்புரி விநாயகருக்கு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மூன்று வேளை அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.லெட்சுமணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.