தூத்துக்குடி

ஆறுமுகனேரி வலம்புரி விநாயகா்கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

ஆறுமுகனேரி கீழ சண்முகபுரம் அருள்மிகு வலம்புரிவிநாயகா் ஆலய வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமத்துடன் விழை தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி தீபாராதனை மற்றும் விமான கலசத்திற்கு புனித நீா் ஊற்றி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

மேலும் அருள்மிகு வலம்புரி விநாயகருக்கு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரவில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மூன்று வேளை அன்னதானமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.லெட்சுமணன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT