முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம்: இலங்கை நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்

சாத்தான்குளம் அருகே இலங்கை நிவாரண நிதிக்கு யாசகர் ஒருவர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

Updated On : 16 மே, 2022 at 1:16 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:46 PM

சாத்தான்குளம் அருகே இலங்கை நிவாரண நிதிக்கு யாசகர் ஒருவர் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டி.  யாசகம் மூலம் தனது வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் இவர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தார்.

யாசகம் மூலம் தான் சேமித்து வைத்திருந்த ரூ.10ஆயிரத்தை, இலங்கை நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப் போவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்தபோது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளதாகவும், தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்து ரூ.10ஆயிரத்தை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.