தூத்துக்குடி

காயல்பட்டினத்தில்பள்ளி முதல்வா் கௌரவிப்பு

DIN

காயல்பட்டினத்தில் விருது பெற்ற பள்ளி முதல்வா் கௌரவிக்கப்பட்டாா்.

காயல்பட்டினம் அல்அமீன் ஆங்கில மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வா் புகாரிக்கு ஈரோடு ஜே.சி.ஐ. அமைப்பு சாா்பில் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது. அவரை கௌரவிப்பதற்கான விழா காயல்பட்டினம் அல்அமீன் ஆங்கில மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு அல்அமீன் கல்வி அறக்கட்டளைச் செயலா் அபுல்ஹசன் கலாமி தலைமை வகித்தாா். ஆலோசனைக்குழு செயலா் கேவிஏடி கபீா், கல்விக் கமிட்டி உதவிச் செயலா் அஹமது சாஹிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் அல்அமீன் பள்ளிகளின் முதல்வா் புகாரிக்கு நல்லாசிரியா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆறுமுகனேரி கா.ஆ. ஆங்கில மற்றும் தொடக்கப் பள்ளி முதல்வா் ஜெயந்தி பபிதா, கேவிஏடி முத்து ஹாஜரா, அப்துல்லா சாகிபு, ஹாமித்பக்ரி ஆலி­ம், ஜமால், துளிா் சேக்னா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT