கயத்தாறு அருகே மின்னல் பாய்ந்து 12 ஆடுகள் பலி
கயத்தாறு அருகே கட்டாரங்குளத்தில் மின்னல் பாய்ந்து 12 ஆடுகள் உயிரிழந்தன.
கயத்தாறு அருகே கட்டாரங்குளத்தில் மின்னல் பாய்ந்து 12 ஆடுகள் உயிரிழந்தன.
கட்டாரங்குளத்தில் புதன்கிழமை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அயோத்திராமன் மகன் செல்லத்துரையின் 4 ஆடுகளும், மாரியப்பன் மகன் முத்துவின் 8 ஆடுகளும் மரத்தடியில் ஒதுங்கினவாம். இதில், மின்னல் பாய்ந்து அவை உயிரிழந்தனவாம். அவை செட்டிகுறிச்சி கால்நடை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.