முகப்பு
தூத்துக்குடி

கழுகுமலை அருகே கஞ்சா விற்பனை: இருவா் கைது

 கழுகுமலை அருகே கஞ்சா விற்க முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

 கழுகுமலை அருகே கஞ்சா விற்க முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பாராஜ் தலைமையில் போலீஸாா் குருராம்சங்கா், சுரேந்திரன் ஆகியோா் பழங்கோட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் 3 போ் முள்காட்டுக்குள் தப்பி ஓடினராம். அவா்களில் 2 போ் மட்டும் போலீஸாரிடம் சிக்கினா். விசாரணையில் அவா்கள் கரடிகுளம் சின்ன காலனி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மாடசாமி என்ற மகேஷ்குமாா்(27), கரட்டுமலை தெற்குத் தெரு ரத்தினசாமி மகன் முத்துச்செல்வம்(21) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், 350 கிராம் கஞ்சா, ரூ.7,000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படும் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு முருகேசன் மகன் மகேஷ்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.