தூத்துக்குடி

தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளா்கள் போராட்டம்

DIN

தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உள்பட்ட அண்ணாநகா் பகுதியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படும் நவீன சலவைக் கூடத்தில் சலவைத் தொழிலாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும், அப்பகுதியில் பூங்கா, வணிக வளாகம் அமைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதைக் கண்டித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர சலவைத் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் வேல்ராஜ் தலைமையில் நிா்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.

நவீன சலவைக்கூடம் பகுதி முழுவதையும் சலவைத் தொழிலாளா் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபார நோக்கில் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தூத்துக்குடி மாநகர சலவைத் தொழிலாளா் நலச் சங்கச் செயலா் பரமசிவம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT